![Kaaval Paraiyan காவல் பறையன்](https://paraiyarsambavar.wordpress.com/wp-content/uploads/2017/02/kaaval-paraiyan-e0ae95e0aebee0aeb5e0aeb2e0af8d-e0aeaae0aeb1e0af88e0aeafe0aea9e0af8d-1.jpg?w=775)
யார் இந்த காவல் பறையன்…?
காவலுக்கும் பறையருக்கும் என்ன சம்பந்தம்…?
பறையர்கள் காவல் தொழில் புரிந்தனரா..?
ஆம் பறையர்கள் காவல் பணியில் ஈடுபட்டிருந்தனர்…
பறையர்கள் அந்த காலக்கட்டத்தில் அடிமைவேலை செய்து வந்தார்கள் என்று வாயிலேயே வடை சுடும் ஆரிய வந்தேறிகளுக்கும்…தலித் தலித் என்று சொல்லி எம் இன வரலாற்றை மறைக்கும் தலித்தியவாதிகளுக்கும்….
இதோ எம் இனம் அஞ்சாமை குணத்தோடு காவல் காத்து வந்த வரலாறு ஆதாரத்துடன்…
![Kaaval Paraiyan History காவல் பறையன் 1](https://paraiyarsambavar.wordpress.com/wp-content/uploads/2017/02/kaaval-paraiyan-e0ae95e0aebee0aeb5e0aeb2e0af8d-e0aeaae0aeb1e0af88e0aeafe0aea9e0af8d.jpg?w=775)
திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் வட்டத்தில் உள்ள சங்கரநயினார் ஆலய தல வரலாறு காவற்பறையனைப்பற்றி குறிப்பிடுகின்றது. சங்க நயினார் ஆலயம் கட்டுவதற்க்கு முன்பு அங்கு காவற்பறையன் என்பவன் புன்செய் நிலத்தை பாதுகாத்து வந்த வேளையில் ஒரு புற்றை இடிக்கையில் அதில் இருந்து லிங்கமும் பாம்பும் வந்ததாகவும், இச்செய்தியை மணலூரில் ஆட்சி செய்து வந்த உக்கிரப்பாண்டியனிடம் சொல்ல உக்கிரப்பாண்டியன் இந்த ஆலயத்தை கட்டுகின்றார். காவற்பறையனை சிறப்பிக்கும் வகையில் இந்த ஆலயத்தில் காவல் பறையனுக்கு சிலை வைக்கப்பட்டுள்ளது.
இதே போல்….
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் வட்டத்திலுள்ள காரையூர் திருமாங்கனி ஈஸ்வரர் கோவிலில் உள்ள கல்வெட்டொன்று ஊரைப்பாதுகாக்கும் பணியில் பறையர் ஒருவர் நியமிக்கப்பட்டதை குறிப்பிடுகிறது. ஆதனமழகியான் என்பவருக்கு காரையூர்ப் பறையன் என்றுபட்டம் கட்டி பாதுகாவல் உரிமையை ஊரார் வழங்கியுள்ளனர். இதற்காக அவரிடமிருந்து நூற்றுப் பத்துப் பணம் பெற்றுள்ளனர். இக்காவல்பணிக்காக இடையர்கள் நெய்யும், வலையர் முயலும், பள்ளர் பறையர் கோழியும் அவருக்கு வழங்கவேண்டுமென்று ஊரவர்கள் முடிவுசெய்துள்ளனர்.