பெ.மா.மதுரை பிள்ளை(பறையர்)-P.M.Madurai Pillai(Paraiyar)


கொடைவள்ளல் கப்பல் ஓட்டிய ஆதித் தமிழர்(பறையர்) பெ.மா.மதுரைப்பிள்ளை அவர்களின் வரலாற்று சுருக்கம்:

P.M.Madurai Pillai Paraiyar-பெ.மா.மதுரை பிள்ளை(பறையர்)
P.M.Madurai Pillai Paraiyar-பெ.மா.மதுரை பிள்ளை பறையர் 1

ரங்கோன் மதுரைப்பிள்ளை என்று சொல்லிடும்போது ஏதோ கடல் கடந்து இத்தமிழ் மண்ணுக்கு வந்தவராக அவரை எவரும் நினைத்திரக்கூடாது.  1858-இல் முப்புறமும் உப்பு நீரால் சூழப்பட்ட இச்சென்னை மாநகரில் தொழிலதிபர் திரு. மார்க்கண்டமூர்த்தி -அம்மணியம்மாள் தம்பதியினருக்கு இரண்டாவது மைந்தனாக 1858 ல் திசம்பர் 26ஆம் நாள் மதுரைப்பிள்ளை பிறந்தார் பிறந்தார்.  இன்று சென்னை வேப்பேரியிலுள்ள சென்பால்ஸ் ஐஸ்கூல்தான் அன்று எஸ்.பி.ஜி. பள்ளியாக இருந்தது.  அந்தப்பள்ளியில் தான் அவரது இளமைக் கல்வி இனிதாக முடிந்தது.  அதன் பின் ரங்கோனிலுள்ள செயின்ட் பால்ஸ் உயர்நிலைப்பள்ளியில் படித்து முடித்தார்.  தமது கல்லூரிப் படிப்பை சென்னை கிறிஸ்டியன் காலேஜில் பயின்றார்

1877-இல் சென்னை மாநில கவர்னர்.  பக்கிங்ஹாம் பிரபுவின் நேர்முக எழுத்தராக இருந்து பணியாற்றினார்.  அவரது தன்னல மறுப்பும், தளரான உழைப்பும் அவரை ரங்கோன் ஸ்ட்ராங் ஸ்டீல் என்ற அமைப்பில் பணியாற்ற வைத்தது.  அவர் ஒழுக்கம் நிறைந்தவராகவும் உயர்ந்த பண்புள்ளவராகவும், நன்னடத்தை மிக்கவராகவும், நம்பிக்கையுள்ளவராகவும் சிறந்து விளங்கின தால் அவர் கப்பல் துபாஷ் ஸ்டீவ்டென் என்கிற ஏற்றுமதி இறக்குமதி வர்த்தக நிறுவனத்தை சொந்தத்தில் ஆரம்பித்து திறமையாகவும் நடத்தினார்.

P.M.Madurai Pillai Paraiyar-பெ.மா.மதுரை பிள்ளை(பறையர்)
P.M.Madurai Pillai Paraiyar-பெ.மா.மதுரை பிள்ளை பறையர் 2

அன்றைய  ஆதிதிராவிட மகாஜன சங்கத்தில் முக்கியத் தொண்டர்களாக இருந்து சமுதாயத்திற்கு சிறப்பாக உழைத்தவர்கள் புரசை கிராமத்தெரு சடகோபன், லாடர்ஸ் கேட் மதுரை வாசகம், ஜார்ஜ் டவுன் மகிமைதாஸ் பத்தர் குறிப்பிடத் தக்கவர்களாவார்கள்.  இந்த மகாஜன சங்கத்தின் போஷகராக இருந்த மதுரைப் பிள்ளை அவர்கள் சங்க சமூக உழைப்பிற்கும் ஊழியத்திற்கும் உன்னத மதிப்பும் மரியாதையும் தந்து சமூக ஊழியர்களை ஊக்குவிப்பதில் உற்சாகப் படுத்துவதில் அவர் மிக வல்லவர்

ஆதிதிராவிட மகாஜன சங்க வளர்ச்சிக்கு பாடுபட்டுழைத்த லாடர்ஸ் கேட் மதுரை வாசகம் மனைவியை இழந்தவராம்.  வாழ்க்கையில் மிக நலிவுற்று இருந்தாராம்.  நல்ல இடத்தில் ஒரு பெண் திருமணத்திற்கு இருந்தது.  அதற்கு அவரது வாழ்வு வளமுள்ளதாக இருந்திட வேண்டும்.  இதை வாயால் சொல்ல வெட்கப்பட்டுக் கொண்டு கடிதம் மூலம் அதனை எழுதி வள்ளளிடம் நேரில் கொடுத்தாராம்.   படித்துப் பார்த்த வள்ளல் பெருமகன் உள்ளே சென்று மூவாயிரம் ரூபாய்களை ஒரு கவரில் போட்டு எவ்வித கேள்வியும் கேளாமல்  போதாவிட்டால் மீண்டும் வந்து வாங்கிக்கொள்ளும் என்று கூறினாராம்.  அந்த மூவாயிரம் ரூபாய் இன்று முப்பது ஆயிரத் துக்குச் சமம்.  ஒரு சவரன் 10 ரூபாய் விற்ற காலம் அந்தக் காலம்.

இது என் தேவைக்கு மேற்பட்ட தொகை, இதுவே போதும் என்று நன்றி உணர்ச்சி மேலிட கூறினாராம் லாடர்ஸ் கேட் மதுரை வாசகம் அவர்கள்.

கிருஸ்துவின் கொள்கைகளை பரப்பிடும் நோக்கத்தில் கிறிஸ்து மத ஸ்தாபனங்கள் அச்சிட்டு அறிக்கைகளை வெளியிடு வதை நாம் பார்த்திருக்கிறோம் அல்லவா.  அதுபோல் அறிவுக்கு ஊக்கம் தரும் நல்ல பல கதைகளையும் அச்சிட்டு இலவசமாக மக்களுக்கு வழங்கினார் இவ்வணிக வேந்தர்.

கல்வி அறிவு தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மிக அவசியமானது அவசரமானது என்பதை உணர்ந்து அவர் ஒரு உயர்நிலைப் பள்ளியை கட்டினார்.  தாழ்த்தப்பட்டோரின் கல்விக் கண்ணைத் திறந்து அவர்களைப் படிக்க ஊக்கமூட்டினார்.

வியாபார நிமிர்த்தமாக லன்டன், ஜெர்மன், உள்ளிட்ட உலகில் உள்ள பெரும் நகரங்களுக்கு சென்று மிகப்பெரும் தொழில் அதிபராக உச்சத்தில் நின்றார். 1885 இல் ரங்கூன் நகர கவுரவ நீதிபதியாகவும், 1880 இல் ரங்கூன் மாநகர கமிஷ்னராகவும் ஏறத்தாழ 30 ஆண்டுகள் மக்களின் நன்மதிப்பை பெற்று அப்பதவியில் தொடர்ந்து இருந்தார். எவரும் குற்றம் கூற முடியாதபடி அவரது சேவை இருந்தது கண்டு வியந்தோர் உண்டு

அவர் பல மேல் நாடுகளுக்குச் சென்று அம்மக்களின் வாழ்க்கைத் தரத்தை நேரில் கண்டு வந்தவர்.  ஜெர்மனி, இங்கிலாந்து, பிரான்ஸ், ஸ்காட்லாந்து, வேல்ஸ், டென்மார்க், நார்வே, இத்தாலி, எகிப்து போன்ற நாடுகளில் உள்ள மக்களைப் போல நம் மக்களும் வாழ்ந்திட வேண்டும் என்கிற பெரும் அவர் அவருக்கு அதிகம் உண்டு.

மதாபிமானம் நிறைந்தவர் அவர்.  அவரது வருவாயில் ஒரு பகுதியை இந்து கோயில்களுக்கு என்று நிரந்தரமாக கொடுத்து வந்தார்.  சொந்தத்தில் ஒரு கோயிலும் கட்டினார்.  அது அல்லாமல் கிறிஸ்தவகளுடைய மகம்மதியர்களுடைய கோயில் களுக்கும் ஸ்தாபனங்களுக்கும் உதவி புரிந்து வந்தார்.

எண்ணற்ற ஏழைகள் பழங்குடி தாழ்த்தப்பட்ட மக்கள் திருமணங்களை அவரே செலவு செய்து முடித்து வைத்திருக்கி றார்.  இது ஒன்றே அவரது நோக்கை பறை சாற்றும்.  எனவேதான் சூரியன் அஸ்தமிக்காத சாம்ராஜ்யத்தின் சக்ராதிபதியாத இருந்த ஐந்தாம் ஜார்ஜ் சக்கரவர்த்திக்கு 1906-இல் அவர் அறிமுகம் செய்விக்கப்பட்டார்.  சக்கரவர்த்தி பெருமிதத்தோடு சிறந்த பொதுத்தொண்டர் என்று பாராட்டினார்.

கோலார் தங்கச் சுரங்கம் காண்ட்ராக்ட் சம்பந்தமாக அவர் தங்கவயல் போவதுண்டு சமூகப் பெரியோர்களுக்கும், வறுமை யில் வாடும் மக்களுக்கும் உதவிகளை செய்ததோடு மருத்துவ வசதியும் செய்துள்ளார்.  சென்னை ராஜா சர் ராமசாமி ஆஸ்பிட்டல் என்பார்கள்.  அதற்கு பெருந்தொகையை நன்கொடையாக அளித்துள்ளார்.

பெருமைக்குரிய நம் பழங்குடி புலவர்கள் இவர்மீது கவி பாடி பல உயர்ந்த பரிசில்களை பெற்றிருக்கிறார்கள்.  இவர்களன்றி இந்து-கிறிஸ்தவ-மகமதிய புலவர்களும் பாடியுள்ளார்கள்.  சுமார் 50-க்கும் மேற்பட்ட புலவர்கள் பாடிய பாக்களைக் கொண்ட 1500 பக்கங்களுடைய மதுரைப் பிரபந்தம் என்ற நூல் ஒன்று அவர் புகழ்பாட இன்றும் நிலவுகிறது.

நம் சமூகப் புலவர்களாக தமிழ் சங்க ஆஸ்தான கவிராயர் சட்டவதானம் வைரக்கண் வேலாயுதப் புலவரிலிருந்து  திவ்ய கவி ராகுவேல்தாஸ், புரசை கிராமத் தெரு கவி சாமிநாத பண்டிதர், கோலார் அய்யாக்கண்ணு புலவர், சென்னை எழும்பூர் திரிசிரபுரம பெரும் புலவர் பெருமாள் பிள்ளை, ரங்கோன் புலவர் கபால மூர்த்தி  கத்திவாக்கம் கா.நா. செ.எல்லப்பதாசர், வண்ணியம்பதி சாக்கிதோமாஸ் புலவர் டி.பி. துரைசாமி அவர்களிலிருந்து திருமலைராயன் பட்டினம் வித்துவான் நா. இராமசாமி, நாகை மாணிக்க கவிராயர் சேலம் சதாவதானம் பாலசுப்பிரமணி அய்யர், தமிழ் பண்டிதர் பு.த. செய்யப்ப முதலி யார், கி. ஆதிமூல முதலியார் நாகை மு. செவந்தி மரைக்காயர், மதுரகவி தேவராஜம் பிள்ளை கும்பகோணம் மகா வித்துவான் கணபதி அய்யர் வரை அவரது கருணைமிக்க வள்ளல் தன்மைக் குப் புகழ் பாடி பொன்னும் பொருளும் பரிசு பெற்றதுண்டு.

P.M.Madurai Pillai Paraiyar-பெ.மா.மதுரை பிள்ளை(பறையர்)
P.M.Madurai Pillai Paraiyar-பெ.மா.மதுரை பிள்ளை பறையர் 3

நன்கொடை நாயகன் நம் குல வள்ளல் ராவ்பகதூர் பி.எம். மதுரைப்பிள்ளை அவர்கள் வழங்குவதையே தன் தொழிலாக வும், கடமையாகவும் கொண்டிருந்தார் என்பது மிகையே ஆகாது.

கொடுத்து கொடுத்து சிவந்த கரம் என்று எவரெவரையோ குறிப்பிடும் வழக்கத்தைக் கொண்ட தாழ்த்தப்பட்ட மக்கள் இனியாவது தெளிந்திட வேண்டும்.

ராவ் பகதூர் பி.எம்.மதுரை பிள்ளையின் உதார குணமும் செயலும் தமிழகத்து மக்களுக்கு சிறந்த படிப்பினையாகும் என்பதை பெருமையாகக் குறிப்பிடலாம்.

1912 இல் ஒரு புதிய கப்பலை வாங்கினார் மீனாட்சி என்று தனது மகளின் பெயரை சூட்டினார்.

1913 ஆம் ஆண்டு சூலை 15 நாள் கொடை வள்ளல் வெ.மா.மதுரைப்பிள்ளை மரணமடைந்தார், அவரது மரணத்தை அறிந்த ரங்கூன் அரசு விடுமுறை அறிவித்தது, பல்லாயிரக்கணக்கான மக்கள் அவரது இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர். வெ.மா. மதுரைப்பிள்ளை அவர்களின் பேரப்பிள்ளைதான் பெண் விடுதலை போராளியும் , பட்டியலின மக்களின் போராளியுமான மீனாம்பாள் சிவராஜ் என்பது குறிப்பிடத்தக்கது

One thought on “பெ.மா.மதுரை பிள்ளை(பறையர்)-P.M.Madurai Pillai(Paraiyar)

Leave a comment