பறையர் பேரின சாம்பவ குல உறவுகளுக்கு வணக்கம்…!
நமது பறையர் குரல் மாத இதழ் வாயிலாக பல்வேறு அறப்பணிகளை மக்களுக்குச் செய்து வருகின்றோம். பறையர்களின் வாழ்வியலில் உளவியல் மாற்றத்தினைக் கொண்டுவர வேண்டும், பறையர்களுக்கான கருத்தியலைக் கட்டமைக்க வேண்டுமென்ற மகத்தான கொள்கையினை இன்றைய இளைஞர் சமூகத்திடம் எடுத்துச் செல்லவேண்டிய அவசியம் உள்ளது.
எனவேதான், பறையர் குரல் வாயிலாக அறியப்படாத பல்வேறு பறையரின ஆளுமைகளைப் பதிவு செய்துள்ளோம். அந்த வரிசையில் மதிப்பிற்குறிய அய்யா சபரி வளநாட்டார் அவர்கள், தென்புலத்தின் முதல் சமூகப்புரட்சியாளர் வேதமாணிக்கப் பறையர் அவர்கள் குறித்து மூன்று கட்டுரைத் தொகுப்பினை பறையர் குரலில் எழுதியுள்ளார். அதனையே தொகுத்து புத்தகமாக கொண்டுவருகின்றோம்.
புத்தக வடிவில் கொண்டுவருவதற்கு அனுமதியளித்த அய்யா சபரி வளநாட்டார் அவர்களுக்கு பதிப்பகத்தின் சார்பாக நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம். இனிவரும் காலங்களில் இதுபோன்ற ஆய்வுப் புத்தகங்களை பாரி (PARE-Paraiyar Research and Educational Foundation) பதிப்பகத்தின் சார்பாக வெளியிட இருக்கின்றோம் என்பதினை மிக்க மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கின்றோம். உறவுகளிடமிருந்து ஆதரவினை எதிர்பார்க்கின்றோம்….
தென்புலத்தின் முதல் சமூகப் புரட்சியாளர் வேதமாணிக்கம் பறையர் அவர்களின் சமூகப் பணி குறித்த இந்த சிறிய புத்தகம் விற்பனைக்கு உள்ளது…உறவுகள் இதனை வாங்கி ஆதரவு கொடுங்கள்……
பாரி பதிப்பகம்(PARE-Paraiyar Research and Educational Foundation)
நூல் விலை–ரூ.30
கழிவு விலை–ரூ.20 (5 புத்தகத்திற்கு மேல் வாங்கினால்)
தொடர்புக்கு:
டாக்டர்.ஜெ.சாமிப்பறையர்
8015510819/9488380143
நமது பறையர்கள் பெருமைகள் வளர வேண்டும்.
தோழா
LikeLike
முந்தி பிறந்தவன் நான் முதல் பூணூல் தரித்தவன் சங்கு பறையன் நான்
LikeLike
சாதிக்க பிறந்தவன் பறையன்
LikeLike
Awesome work. We have expose to the world the glorious past our Paraya community. Needed related books
LikeLike